மனைவியின் உடலை நிர்வாணமாக சூட்கேஸில் வைத்த கணவர் கைது: அதிர்ச்சி சம்பவம்!

வியாழன், 20 அக்டோபர் 2022 (15:37 IST)
மனைவியின் உடலை நிர்வாணமாக சூட்கேஸில் வைத்த கணவர் கைது: அதிர்ச்சி சம்பவம்!
மனைவியின் பிணத்தை நிர்வாணமாக சூட்கேசில் வைது வைத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 
 
டெல்லி அருகே சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்த நிலையில் அதை போலீசார் திறந்து பார்க்கும்போது இளம்பெண்ணின் உடல் நிர்வாணமாக இருந்தது. இதனை அடுத்து அங்கு உள்ள சிசிடிவி தடயங்களை வைத்து விசாரணை செய்ததில் ஆட்டோவில் ஒருவர் வந்து சூட்கேசில் வைத்து விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனையடுத்து தீவிர விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்தபோது அவரது பெயர் ராகுல் என்றும்,  அவருக்கு 20 வயதான பிரியங்கா என்ற மனைவி இருந்ததாகவும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
 
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ராகுல் பிரியங்காவிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தாகவும், இந்த சண்டையில் போது நடந்த அடிதடியில் பிரியங்கா கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனையடுத்து தனது மனைவியின் உடலை நிர்வாணமாக்கி சூட்கேசில் வைத்து யாருமில்லாத இடத்தில் வைத்து விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்