இந்நிலையில் இந்த படம் சம்மந்தமாக சமீபத்தில் சூர்யா, வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்நிலையில் படத்தை 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜல்லிகட்டு சம்மந்தமான படம் என்பதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தால் வரவேற்பு சிறப்பாக இருக்கும் என இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.