வெற்றி வந்தவுடன் நடிகர்கள் மாறிவிடக்கூடாது: சிம்புவை சீண்டும் எஸ்.ஏ.சி!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:34 IST)
வெற்றி வந்தவுடன் நடிகர்கள் மாறிவிடக்கூடாது என மாநாடு வெற்றி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார். 

 
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு.இவரது இயக்கதிதில், நடிகர் சிம்பு.- எஸ்ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் மாநாடு. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.
 
ஆனால் இந்த விழாவில் படத்தின் நாயகனான சிம்பு கலந்துகொள்ளவில்லை. தயாரிப்பாளருக்கும் சிம்புவின் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் சிம்பு இதில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் இது குறித்து விமர்சித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, படத்தின் கதாநாயகன் இந்த நிகழ்ச்சிக்கு வராதது ஏன் என தெரியவில்லை. இன்று படப்பிடிப்பு இருந்தாலும் இங்கு அவர் வந்திருக்க வேண்டும். அவர் வராதது எனது மனதுக்கு கடினமாக இருக்கிறது. தயாரிப்பாளருக்காக அவர் வந்திருக்க வேண்டும். நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது, படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால் தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும் என குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்