போர்த் தொழில் இயக்குனரின் அடுத்த படம் பற்றிய தகவல்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (08:02 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். ஜூன் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டி வெற்றி பெற்ற திரைப்படங்களில் போர் தொழில் படமும் ஒன்று. போர் தொழில் திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. போர் தொழில் திரைப்படம் ஓடிடியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகி அதிலும் நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அதற்கான திரைக்கதைப் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்