தமிழகத்தில் செப். 1 ஆம் தேதி வரை மழை தொடருமாம்...

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (13:23 IST)
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல். 
 
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் ஆகஸ்டு 30 வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வானிலை ஆய்வு மைய தகவலின் படி தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு. 
 
அதேபோல, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்