கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து: லாரி-பேருந்து மோதியதில் 8 பேர் பலி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (15:27 IST)
கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 30 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
 
கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் லாரி-தனியார் பேருந்தும்-கார் ஒன்றோடு ஒன்று  மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் விரைந்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்