அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சையா? மருத்துவர்கள் விளக்கம்..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (12:42 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 
 
இதனை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள்  அவருக்கு தேவைப்பட்டால் மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர் 
 
காலில் உள்ள நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்ததால் அவருக்கு அடிக்கடி கால் மரத்து போவதாகவும் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.  
 
இதய சிகிச்சை பிரிவு துறை தலைவர் மனோகரன் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்