கல்லூரி மாணவிக்கு தவறான சிகிச்சை? உறவினர்கள் புகாரால் பரபரப்பு..!

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (16:18 IST)
திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலிக்காக வந்த மாணவி அக்‌ஷிதாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்படுள்ளது. 
 
மாணவி அக்‌ஷிதாவுக்கு ஒட்டுக்குடல் முற்றி வெடிக்கும் நிலையில் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும், அறுவை சிகிச்சைக்குப்பின் 2 நாட்கள் மாணவி மயக்க நிலையிலேயே இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
 
மேலும் அறுவை சிகிச்சையின்போது ஆக்சிஜன் அளவு கூடிவிட்டதாக, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவிக்கு அளித்த சிகிச்சை குறித்து உரிய பதிலளிக்காத மருத்துவமனை நிர்வாகத்துடன் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் மாணவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்