தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கில் திருப்பம்..!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (10:25 IST)
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீதி பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் தடை விதித்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை தொடர்வதாக எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார். 
 
சேலம் மத்திய குற்றப்பரிப்பு போலீசாருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பதிவு செய்துள்ள இந்த மனுவுக்கு ஜூலை ஏழாம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்