தெலுங்கில் எஃப் ஐ ஆர் படத்தை ரிலீஸ் செய்ய விரும்பிய விஷ்ணு விஷால்… ஆனால் நடந்தது வேறு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (09:44 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப் ஐ ஆர் திரைப்படம் தமிழில் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலிஸ் ஆகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்.ஐ.ஆர் திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் இப்போது கேரள மற்றும் கர்நாடக உரிமை மற்றும் ஓடிடி உரிமை (அமேசான் ப்ரைம்) ஆகியவற்றை ரிலிஸூக்கு முன்பே விற்று கையில் லாபத்தோடு படத்தை ரிலீஸ் செய்கிறார். இவரின் முந்தைய படமான ராட்சசன் வெற்றியே எஃப் ஐ ஆர் விநியோகத்துக்கு பெருமளவில் உதவி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை எப்படியாவது தெலுங்கிலும் டப் செய்து வெளியிட வேண்டுமென விஷ்ணு விஷால்  விரும்பினார். ஆனால் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உரிமையை தயாரிப்பாளர் விற்று விற்றதால் அது நடக்கவில்லை. ஆனால் ஓடிடி மூலமாக படம் தெலுங்கில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு பதிப்பின் டிரைலரை நடிகர் நானி வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்