இது இயக்குனருக்குக் கிடைத்த வரவேற்பு என்றுதான் சொல்லவேண்டும்- மகாராஜா குறித்து விஜய் சேதுபதி!

vinoth
வெள்ளி, 14 ஜூன் 2024 (16:46 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி படத்தின்  மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதால் இந்த வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி “இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. படத்தின் திரைக்கதை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் நித்திலனுக்குக் கிடைத்த வரவேற்பாகவே நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்