தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்தப் படம் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, சரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்தப் படம், கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல், பிரிவு, சண்டை, விவாகரத்து உள்ளிட்டவற்றை மிகவும் சுவாரசியமாக பேசி உள்ளது என்பது கிட்டத்தட்ட மூன்று நிமிட ட்ரெய்லர் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
"உன்னை நான் நன்றாகப் பார்த்துக் கொள்வதை பார்த்து, நீ உன் அப்பா அம்மாவையே திட்டுவாய்" என்று ஆரம்ப காட்சிகளில் விஜய் சேதுபதி கூறும் நிலையில், அதற்கு அடுத்த காட்சிகளிலேயே பஞ்சாயத்து முன் "எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டுருங்க" என்று நித்யா மேனன் கூறுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.