கலைஞர் 100 நிகழ்ச்சியில கலந்துகிட்டே ஆக வேண்டிய கட்டாயம்.. விஜய் எடுக்கப் போகும் முடிவு என்ன?

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:40 IST)
தமிழ் திரை உலகினர் இணைந்து கலைஞர் 100 என்ற விழாவை டிசம்பர் 24 ஆம் தேதி நடத்த இருந்த நிலையில் அந்த விழாவின் தேதி ஜனவரி 6 என்று மாற்றப்பட்டது.  அதேபோல் இந்த விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு புதிய அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரஜினி மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய், அஜித் போன்றோர் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் விழா நடக்கும் அன்று விஜய் சென்னையில்தான் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அன்று தமிழ் சினிமா ஷூட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய் கண்டிப்பாக கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்