மார்ச் 18 ல் தொடங்குகிறது சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (16:48 IST)
சூர்யா நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கிய ரீமேக் படமான வர்மா சில காரணங்களால் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காமல் போகவே கிடப்பில் போடப்பட்டு, வேறொரு இயக்குனரால் மீண்டும் படமாக்கப்பட்ட ரிலிஸ் செய்யப்பட்டது. ஒரு மூத்த இயக்குனருக்கு இப்படியான நிகழ்வு நடந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதையடுத்து தனது அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக வேலைகளில் இறங்கியுள்ளார் பாலா. அந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க உள்ளார். மேலும் அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்துவரும் நிலையில் இந்த படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 18 ஆம் தேதி படப்பிடிப்பு மதுரையில் தொடங்குகிறது. மூன்றே மாதத்தில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்