அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தின் கதையை அஜித்திடம் நேரில் சொல்ல தனுஷ் பலமுறை முயற்சித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அஜித் இந்தியாவில் இருக்கும்போது தனுஷ் வெளிநாட்டிலும், தனுஷ் இந்தியா திரும்பியபோது அஜித் வெளிநாட்டிலும் இருந்ததால், இருவரின் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி, அஜித் தற்போது துபாயில் இருக்கிறார். அவரை துபாய் சென்று தனுஷ் சந்திக்க இருப்பதாகவும், அப்போது அவர் கதையை சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தனுஷ் துபாய் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் சொல்லும் கதை அஜித்துக்கு பிடித்துவிட்டால், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அஜித்தே முடிவு செய்ய தனுஷ் திட்டமிட்டிருப்பதாகவும், தயாரிப்பாளர் விஷயத்தில் தான் தலையிட மாட்டார் என்று அஜித் தரப்பிடம் உறுதி அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.