சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவரிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த கிருஷ்ணா திடீரென தலைமறைவானார்.
இதனை அடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில், சென்னையில் அவர் பிடிபட்டதாகவும், அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரத்தப் பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால், அவரும் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.