அவதார் போல உலகம் போற்றக்கூடிய படமாக வேள்பாரி வரும்- இயக்குனர் ஷங்கர் நம்பிக்கை!

vinoth

சனி, 12 ஜூலை 2025 (08:13 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை ஹீரோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் வேள்பாரி நாவலின் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை சார்பாக நடத்தப்பட்ட வெற்றிவிழாவில் கலந்துகொண்ட ஷங்கர் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “இதுவரை எந்திரன்தான் என்னுடையக் கனவுப்படமாக இருந்தது. ஆனால் இப்போது  ‘வேள்பாரி’ படம்தான் என்னுடையக் கனவுப்படமாக உள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் அவதார் போன்று உலகம் போற்றக் கூடிய காவியமாக வருவதற்கானக் கூறுகள் இந்த நாவலில் உள்ளன. அது சீக்கிரமே நடக்கும் என நம்புவோம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்