ஷாருக் கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தாவா?

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (10:23 IST)
நயன்தாரா ஷாருக் கான் படத்தில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது.  படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அட்லி மும்பையில் தொடங்கியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டதில் ஷாருக் கான் மன உளைச்சலில் உள்ளாராம். இதனால் படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்பதே நிச்சயமாக அட்லி உட்பட யாருக்கும் தெரியவில்லையாம்.

இதனால் அந்த படத்துக்காக மொத்தமாக தேதிகள் ஒதுக்கிய நயன்தாரா இப்போது அந்த படத்தில் இருந்து விலகிவிடலாமா என்ற குழப்பத்தில் உள்ளாராம். இது சம்மந்தமாக அவர் அட்லியிடமும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா விலகினால் அவருக்கு பதில் சமந்தாவை ஒப்பந்தம் செய்ய அட்லி முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்