பல ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் விஜய் பட இயக்குனர்!

புதன், 27 அக்டோபர் 2021 (11:01 IST)
இயக்குனர் தரணி தமிழ் சினிமாவில் தில், தூள்  மற்றும் கில்லி ஆகிய படங்களின் மூலம் அடையாளம் பெற்றவர்.

எதிரும் புதிரும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தரணி. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறாததால் அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தில் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து கமர்ஷியல் இயக்குனராக உருவாகினார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய தூள் மற்றும் கில்லி ஆகிய படங்களின் மூலம் உச்சத்துக்கு சென்றார். அதன் பின்னர் அவர் இயக்கிய குருவி மற்றும் ஒஸ்தி ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் 8 ஆண்டுகளாக அவர் எந்த படமும் இயக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் ஒரு திரைக்கதை எழுதி வருவதாகவும் , விரைவில் அவர் தன் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்