புதுவீடு கட்டி பால் காய்ச்சிய தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (19:09 IST)
புதுவீடு கட்டி பால் காய்ச்சிய தமிழ் நடிகை:
தமிழ் நடிகை ஒருவர் புது வீடு கட்டி பால் காய்ச்சிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
 
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 1983 என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்டசிவாகெட்டசிவா, கலகலப்பு2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இன்றுடன் அவர் திரையுலகில் வந்து ஏழு வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நிக்கி கல்ராணி புது வீடு கட்டி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் அந்த வீட்டில் பால் காய்ச்சி, புதுவீட்டில் குடிபுகுந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இது குறித்த புகைப்படங்களை நிக்கி கல்ராணி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்