தாண்டவ்' வலைதொடர் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு: பகிரங்க அறிவிப்பால் பரபரப்பு

திங்கள், 25 ஜனவரி 2021 (13:20 IST)
தாண்டவ்' வலைதொடர் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு
பாலிவுட்டில் தயாராகும் வெப் தொடரான ’தாண்டவ்' படக்குழுவினர்களின் நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என பகிரங்கமாக அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் நடித்துள்ள ’தாண்டவ்' தொடரில் ஐந்து இந்து மத கடவுள்களை அவமதிப்பு செய்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து ஒரு பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் சயீப் அலிகான் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் ’தாண்டவ்' பட குழுவினர்களின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று கர்ணி சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்