உதயநிதி ஸ்டாலின் – மாரி செல்வராஜ் படத்தின் கதைக்களம் இந்த ஊரில் நடக்கிறதாம்! விரைவில் படப்பிடிப்பு!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (09:34 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜின் இரண்டு படங்களும் தென் தமிழகத்தை பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்