இன்று பூஜையோடு தொடங்கிய லோகேஷ்- அருண் மாதேஸ்வரன் படம்!

vinoth

வியாழன், 23 அக்டோபர் 2025 (18:13 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்த உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். கடைசியாக அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக  நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு பீரியட் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் ஷூட்டிங் பூஜையோடு சென்னையில் தொடங்கியுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்