படத்தில் இருக்கும் குறைகள் பெரிதாக்கப்பட்டு ஆன்லைனில் இந்தப் படத்தைத் தாக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்களும் அதிகளவில் பரவி வருகின்றன. இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தின் மூலம் ஆன்லைன் விமர்சனங்களைப் பார்க்கக் கூடாது என்பதைக் கற்றுக் கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் “ஆன்லைன் விமர்சனங்களில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளன. நான் எல்லா விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களைப் பார்த்தாலே அது தெரியும். ஒரு படம் வெளியாவது என்பது அந்தப் படக்குழுவினருக்கு ஒரு கனவு. ஆனால் அவர்கள் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூடாது என்பதாகவே சில விமர்சனங்கள் உள்ளன.படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதே முக்கியம். அதை நான் இந்த படத்தில் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.