ஜிகர்தண்டா 2 வுக்குப் பிறகு விஜய்க்குக் கதை சொல்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்?

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (09:05 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் சுப்பராஜ் அடுத்து விஜய்க்கு கதை சொல்ல உள்ளதாக தகவல்கள் தற்போது பரவி வருகின்றன. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் ஒருமுறை விஜய்க்குக் கதை சொல்லி, அந்த கதையை அவர் நிராகரித்துவிட்டதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்