''சில இயக்குநர்கள் என்னிடம் மோசமாக நடந்தனர்''-பிரபல நடிகை பகிர்ந்த தகவல்

செவ்வாய், 25 ஜூலை 2023 (13:36 IST)
சினிமாவில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றி பிரபல நடிகை ஷெர்லின் சோப்ரா பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷெர்லின் சோப்ரா. இவர், வெண்டி மப்பு என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் யுனிவர்சிட்டி, பீப்பர் டைம் பாஸ், தோஸ்தி, சம்திங் ஸ்பெஷல் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இந்தி பிக்பாஸ் 3 வது சீசனில் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் நடிகையாக தான் பட கஷ்டங்கள் பற்றி அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ''படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுச் செல்லும்போது, சில இயக்குனர்கள் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். ஒரு இயக்குனர் என்னிடம் தவறாக  நடக்க முயன்றபோது, அவரிடம் உங்களுக்கு திருமணமாகிவிட்டது என்பதை  நினைவில் வையுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர், தன் மனைவியுடன் இப்போது இணைந்து இல்லை…'' என்று கூறினார். இதுபோல் பல துன்பங்கள் அனுபவித்ததாக கூறியுள்ளார்.

மேலும், ''எனக்கு கிட்னி பாதித்தபோது, என் குடும்பத்தினர் எனக்கு கிட்னி தானம் கொடுக்க தயாராக இல்லை…அதன்பின்னர் மருந்து, சாப்பிட்டு குணமானேன்…. எனக்கு உதவாத குடும்பத்தினர் நான் அக்கறை செலுத்துவது இல்லை'' என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்