ஜெய் பீம் பார்த்து என் கண்களே குளமானது! – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (13:13 IST)
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய் பீம் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பார்த்து தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மநீம தலைவர் கமல்ஹாசன் “பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தா.செ.ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்