நடிகர் அமிதாப்பச்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று: டுவிட்டரில் தகவல்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (08:10 IST)
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
பிரபல நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகிய மூவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதும் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு தற்போது மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்