புதிய தொகுப்பாளரோடு மீண்டும் வரும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (07:24 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஜீ தமிழ் சேனலில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகரும் இயக்ககுனருமான கரு பழனியப்பன், அந்நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார்.

வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் கரு பழனியப்பன் விலக, அவருக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் இடையே அரசியல் சம்மந்தமான கருத்து வேறுபாடுகள் எழுந்ததே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் கரு பழனியப்பான் கலைஞர் தொலைக்காட்சியில் அதே போல வேறொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சி ஆவுடையப்பன் தொகுத்து வழங்க புதிதாக ஒளிபரப்பாக உள்ளது. இதை ஜி தமிழ் சேனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்