நாளை 2வது பிளே ஆஃப் போட்டி: ராஜஸ்தானுடன் மோதும் அணி எது?

Webdunia
வியாழன், 26 மே 2022 (09:28 IST)
நாளை 2வது பிளே ஆஃப் போட்டி: ராஜஸ்தானுடன் மோதும் அணி எது?
 கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாளை 2வது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன 
 
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூர் அணி மோதிய நிலையில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்று இரண்டாவது பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற்றது 
 
இதனை அடுத்து நாளை ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் இரண்டாவது பிளே ஆப்போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் குஜராத் அணியுடன் மோது என்பது குறிப்பிடத்தக்கது
 
ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளுமே கிட்டத்தட்ட சம வலிமையுடன் இருப்பதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்