ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்: பரிதாபத்தில் ஆஸ்திரேலியா

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (07:45 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து தொடரை வென்றுள்ளது 
 
நேற்றைய 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
 
இதனை அடுத்து 211 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 37.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை பாகிஸ்தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்  ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்