ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது நாற்பதாக இருக்கும். ரோஹித், கோலி போல உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நபரும் அல்ல. இதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுபற்றி பேசியுள்ள ரோஹித் ஷர்மா தான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் யுவ்ராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் இந்திய அணி வீரருமான யோக்ராஜ் சிங் இதுபற்றி பேசுகையில் “பிசிசிஐ ரோஹித் ஷர்மாவிடம் பேசி அவரை மேலும் 5 ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும். அவருக்கு அந்த தகுதி உண்டு. அவரால் 45 வயது வரை சிறப்பாக விளையாட முடியும்” எனக் கூறியுள்ளார்.