நாளைத் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் முகாமிட்டிருக்க, இந்தியா மட்டும் துபாயில் உள்ளது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியுடன் இருந்த பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அவரது தந்தை காலமானதால் இப்போது தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்பியுள்ளார். இதனால் இந்திய அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளில் அவர் இருக்க மாட்டார். இது துபாயில் பந்துவீசி அனுபவமற்ற இந்திய பந்துவீச்சு யூனிட்டுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.