மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்: விரைவில் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (19:09 IST)
மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்: விரைவில் தேதி அறிவிப்பு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதை அடுத்து மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்