ஐபிஎல் 2023க்கான ஏலம் எப்போது? பரபரப்பு தகவல்

ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (15:37 IST)
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த போட்டிக்கான ஏலம் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 
 
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற ஐபிஎல் போட்டி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதும் 2023 ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஐபிஎல் 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
டாடா நிறுவனம் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை நடத்தக உள்ள நிலையில் இந்த ஏலத்தில் முக்கிய வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்