விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்..!!

Senthil Velan
திங்கள், 10 ஜூன் 2024 (13:33 IST)
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார்.
 
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: சீமானை பழிப்பது குறையாது - இனி கழிப்பது இயலாது..! வைரமுத்து ட்விட்..!

மேலும் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், விக்கிரவாண்டி இடை தேர்தலில் பயன்படுத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்