இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (19:27 IST)
இரவு பத்து மணி வரை தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்றும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் கோடைகாலமாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதளத்தில் மழை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திருப்பூர், சேலம் , நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி , தேனி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்