சதி செய்கிறார்கள், விழிப்பாக இருக்க வேண்டும்: இப்தார் விழாவில் முதல்வர் பேச்சு

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:12 IST)
தமிழினத்தை மதத்தால் சாதியால் பிரிக்க சதி செய்கிறார்கள் என்றும் அதனால் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
சென்னை திருவான்மியூரில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார்
 
 பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ’முன்னாள் முதல்வர்கள் அண்ணா கருணாநிதி ஆகியோர்களை இணைத்தது மிலாடி நபி நிகழ்ச்சிதான் என்று பெருமையுடன் கூறினார்
 
இன்றைய சூழ்நிலையில் தமிழினத்தை ஜாதி மதங்களை வைத்து சிலர் பிரிக்க சதிமுயற்சி செய்து வருவதாகவும் தமிழினத்தை பிரிக்க்கும் சதிகளை புரிந்து கொண்டு அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்