தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்ததாகவும், அவர்களுடைய விசைப்படகையும் சிறைப்படுத்தியதாகவும் தெரிகிறது. மேலும் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிச்செல்ல இரண்டு தமிழக மீனவர்கள் முயற்சி செய்தபோது அவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக மீனவ சங்கங்கள் இது குறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்