ரேசன் ஊழியர்கள் சண்டையிடக்கூடாது- கூட்டுறவுத்துறை உத்தரவு

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (20:43 IST)
குடும்ப அட்டைதாரர்களிடம் ரேசன் ஊழியர்கள் சண்டையிடக்கூடாது என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகக் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளதாவது:

''தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது. ரேசன் கடை ஊழியர்கள் கனிவோடும், மரியாதையாகவும் கண்ணி மாகவும் நடந்து கொள்ள வேண்டும்.குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில்  ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நியாய விலை கடைகள் உள்ளே மற்றும் வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்