சென்னை பெரம்பூரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, காமராஜர் பிறந்தநாள் என்பதால் அது தொடர்பாகவும் பேசினார். அப்போது, "கருணாநிதி சில சமயம் என்னிடம் தன்னுடைய பழைய நிகழ்வுகளை சொல்வார். அவ்வாறு சொன்னது ஒன்றை நான் உங்களுக்கு சொல்கிறேன்.
தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டன கூட்டம் போடும்போது அவருக்கு ஏசி இல்லை என்றால் உடம்பு ஒத்துக் கொள்ளாது என்று கருதி, கருணாநிதி அவர் தங்கும் விடுதியில் ஏசி அமைக்க உத்தரவிட்டார். தன்னை எதிர்த்துப் பேசினாலும் அவரது உடல்நிலை கருதி நான் உத்தரவிட்டேன்" என்று கூறினார். "
காமராஜரும், கருணாநிதியும் தற்போது உயிரோடு இல்லை என்ற நிலையில், இப்படி ஒரு கருத்தை இதுவரை யாருமே கூறியதில்லை. ஆனால், இவ்வளவு ஆண்டுகள் கழித்து திருச்சி சிவா இந்த தகவலைக் கூறி இருப்பது, காமராஜரை இழிவுபடுத்தும் செயல் என்று கூறி வருகின்றனர்.