காலாண்டு தேர்வு வினாத்தாள் 'வாட்ஸ் அப்'பில் லீக்.. அதிர்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (12:48 IST)
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு  காலாண்டு தேர்வின் வினாத்தாள் வாட்ஸப்பில் லீக் ஆகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களின் வினாத்தாளுமே வாட்ஸப்பில் லீக் ஆகி உள்ளதாகவும் இதனால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்