பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில், டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில், சமூக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ் இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்த போது, “ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைச்சாமி இருவருமே என்னுடைய நீண்ட கால நண்பர்கள். நட்பின் அடிப்படையில் சில ஆலோசனைகள் நடத்திச் சென்றனர். வேறு அரசியல் காரணம் எதுவும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே," என்றும் அவர் தெரிவித்தார்.