ஆனால், அதே நேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கும் போது இடதுசாரி சிந்தனையுடன் தொடங்கப்பட்டது என்றும், ஆனால் இப்போது பிரச்சனையை தீர்க்க நடுவராக செயல்பட்டு வருபவரை பார்க்கும் போது, அந்த கட்சி வலதுசாரி சிந்தனைக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது என்றும் தெரிவித்தார்.
வலதுசாரி அரசியலுக்கு அவர்கள் முழுமையாக போய்விட்டார்கள் என்பதை, பஞ்சாயத்தாரின் முயற்சி மூலம் வெளிப்பட்டு உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி இடதுசாரி சிந்தனைகளால் தான் எழுச்சி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இப்போது அது வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது. அதன் அடிப்படையில் பஞ்சாயத்து செய்யக்கூடியவர்கள் இன்றைக்கு வெளிப்படையாக, அம்பலமாகி இருக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு வெளிச்சமாகி உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.