இன்று காலை ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ராமதாஸ் வீட்டிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அதேபோல், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைச்சாமியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகவும், அது மட்டும் இன்றி ராமதாஸ் மூத்த மகள் காந்திமதி, அன்புமணியின் மகள் சஞ்சுத்ரா உள்பட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள், பேராசிரியர் தீரன் உள்பட சிலர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்புமணி – ராமதாஸ் இருவரும் நேரில் சந்தித்து சமரசம் செய்து கொண்டதாகவும், இனிமேல் பாமக ஒற்றுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.