பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும், அவருடைய மகனும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், "கட்சிக்கு நான்தான் தலைவர்" என்று அன்புமணி தெரிவித்தார்.
இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றிக்கொண்டே இருந்தபோதும், கட்சியின் முக்கிய பிரமுகர்களின் அறிவுரைக்கு ஏற்ப தற்போது இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.