மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (14:32 IST)
பிற்பகல் அவை கூடிய பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மூன்றாவது நாளாக கூடிய நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், பிற்பகல் அவை கூடிய பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்