தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை.. பெரும் பரபரப்பு..!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (09:28 IST)
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாகவும், ரசாலிபுரம் தெருவில் உள்ள இத்ரிஸ் என்பவரின் வீட்டில் அதிகாலை 5 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இத்ரிஸ் செல்போன் எண்ணுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து அழைப்பு வருவதாக தகவல் கிடைத்ததாகவும், இந்த தகவலின் அடிப்படையில் இத்ரிஸ் என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் கோவை, 82 வார்டில் இருக்கும் கோட்டை ஈஸ்வரன் கோவில் வாசலில் சென்ற ஆண்டு வெடித்த கார் குண்டு சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் வீட்டில் என்ஐஏ சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்