சம்பவம் நடந்த அன்று இரவு நேரத்தில், வேளச்சேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அந்த இளைஞர், அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் அலறியதால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
காவல்துறையினர் லட்சுமணனை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் இதேபோன்று வேறு பல பெண்கள் விடுதிகளிலும் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.