தர்மஸ்தலா கோயில் மீதான குற்றச்சாட்டுகள்: அரசியல் சதியா? அண்ணாமலை கேள்வி

Siva

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (09:26 IST)
பெங்களூருவில் உள்ள ஒரு நபர் ஒருவர், தர்மஸ்தலா கோயில் தொடர்பான புகார் அளித்திருக்கும் நிலையில், கர்நாடக அரசு அந்த புகாரை நம்பி ஏமாந்துவிட்டது என முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சனாதன தர்மத்தின் தூணாக விளங்கும் தர்மஸ்தலா கோயிலை பழிவாங்குவதற்காக பின்னப்பட்டுள்ள ஒரு பெரிய சதி இது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
"இது ஒரு தனிப்பட்ட நபரின் செயல் அல்ல. இது இன்னும் வெளிவராத ஒரு பெரிய சதி," என்று அண்ணாமலை கூறியுள்ளார். 1994 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் உடல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை ஒரு பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.
 
ஒரு சில தலைவர்கள், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உள்ள உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தர்மஸ்தலா கோயிலுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கர்நாடகத்திலும், தமிழகத்திலும் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்